Advertisement

அமிர்த கணபதி கோவில் நவராத்திரி விழா

விழுப்புரம்; விழுப்புரம் இ.எஸ்., கார்டன் பகுதியில் உள்ள அமிர்த கணபதி கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி, சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், ஆஞ்சநேயர் சனீஸ்வர சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.

Advertisement
 
Advertisement