Advertisement

ராசிபுரம் சுற்று வட்டாரத்தில் கோவில் விழாக்கள் நிறுத்தம்

ராசிபுரம்: கொரோனா ஊரடங்கால், ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில், கோவில் விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ராசிபுரம், அத்திபலகானூர், புதுப்பாளையம், முருங்ககபட்டி, சி.எஸ்.புரம், உள்ளிட்ட பகுதிகளில் ஐப்பசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து பகுதிகளிலும் திருவிழாக்கள் ரத்து செய்யப்படுவதாக ஹிந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் புனரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த வாரம், பூச்சாட்டுதலுடன் தொடங்கவேண்டியது. ஆனால், கொரோனா ஊரடங்கால், இக்கோவில் விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் என்றாலே ராசிபுரம் நகர் மட்டுமின்றி, கிராமங்கள் அனைத்திலும் பண்டிகை நடக்கும் என்பதால், களை கட்டிவிடும். தற்போது பண்டிகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement
 
Advertisement