Advertisement

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் தேசிய இளைஞர் தினம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தர், 158 வது பிறந்த தினத்தை ஒட்டி, தேசிய இளைஞர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வித்யாலயா வளாகத்தில் உள்ள விவேகானந்தா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு ஆரத்தி பூஜை நடந்தது. வித்யாலய சுவாமிஜிகள், வித்யாலயத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் விவேகானந்தர் சிலை முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். தொடர்ந்து, அனைத்து நிகழ்ச்சிகளும் வைரஸ் தொற்று காரணமாக, ஆன்லைன் வாயிலாக நடந்தது. விழாவில், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு, புதுடெல்லி ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி நித்யதிபானந்தா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, ஆன்லைன் வாயிலாக சிறப்புரையாற்றினார். நிரஞ்சன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகள், வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமையில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement