Advertisement

சதுரகிரியில் மஹா சிவராத்திரி மார்ச் 10 முதல் அனுமதி

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மஹாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 10 முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். மாசி மஹாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 10 காலை 7:00 மணி முதல் அமாவாசைக்கு மறுநாளான மார்ச் 14 மதியம் 12:00 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு தங்குவதற்கும் அனுமதி கிடையாது.

Advertisement
 
Advertisement