Advertisement

திருவெற்றியூரில் கொடியேற்றம் பக்தர்கள் அனுமதி இல்லை

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை விழா கொடியேற்றத்தில் பக்தர்கள் கூட்டத்திற்கு அனுமதி இல்லை.

திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.17) காலை 7:35 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கபட்டுள்ளது.

இது குறித்து தேவஸ்தான அலுவலர்கள் கூறியதாவது: கொரோனா பரவலை தொடர்ந்து கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கோயில் உள் பிராகரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 25 ந் தேதி நடைபெறும் தேரோட்டம், மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யபட்டுள்ளது. இதே போல் தினமும் விழா நாட்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள மண்டபத்தில் தங்க அனுமதி இல்லை என்றனர்.

Advertisement
 
Advertisement