Advertisement

படலம் 17: ஆடிமாத பூர நட்சத்ர பூஜா முறை

பதினேழாவது படலத்தில் ஆடிமாத பூரநட்சத்ர விளக்கப்படுகிறது. முதலில் ஆடிமாத பூர நட்சத்ரம் கூடிய தினத்திலோ ஐப்பசிமாத பூரநட்சத்திரத்திலோ இங்கு பூஜை செய்க என விளக்கமாக காலம் கூறப்படுகிறது. பிறகு தேவிக்கும், அல்லது ஸ்வாமி, அம்பாளுக்குமோ ரக்ஷõபந்தனம் செய்க. காலையில் கன்னிகைகளுக்கு ஸ்வர்ணங்கள் வஸ்திரம் உணவு இவைகளை கொடுத்து தேவிக்கு பால் நிவேதனம் செய்யவும், எல்லா அலங்கார ஸஹிதமாக தேவியை கிராம பிரதட்சிணம் செய்து ஆஸ்தான மண்டபம் சேர்க்கவும், கிராம பிரதட்சிண சமயத்தில் உப்புடன் கூடிய முளைப்பயறு நிவேதனம் செய்ய வேண்டும். ஆஸ்தான மண்டபத்தில் வலம் வருதல் விதிக்கப்படுகிறது. பிறகு சூர்ணோத்ஸவம் இன்றி அரிசி முதலிய தானம் மட்டுமே செய்க என சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அஸ்த்ரதேவனுடன் கூடி தேவியை நதி முதலான தீர்த்தங்களுக்கு அழைத்து சென்று தீர்த்தவாரி உத்ஸவபடி செய்ய வேண்டும். தீர்த்த விழாவிற்கு பிறகு தேவியை ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தீர்த்தோத்ஸவம் இன்றி கிராம பிரதட்சிணம் மட்டும் செய்க என வேறுவிதமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமிக்கும், தேவிக்கும் கிராம பிரதட்சிண பூர்வமாக தீர்த்தோத்ஸவம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. தீர்த்தோத்ஸவத்திற்கு பிறகு ஆலயம் அமைத்து அங்கு ஸ்நபனம் செய்து வாசனையுடன் கூடிய தாம்பூலத்துடன் மஹாஹவிஸ் நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆசார்ய பூஜை செய்க என சுருக்கமாக விளக்கப்படுகின்றது. முடிவில் தேவியின் திருப்தி காரணத்திற்காக இந்த பூர நட்சத்திர பூஜா விதானம் எல்லா தீங்கு நிவிருத்திக்காகவும் எல்லா பாப அழிவிற்காகவும் எல்லா கார்ய சித்திக்காகவும், எல்லா விருப்ப பூர்த்திக்காகவும் செய்ய வேண்டும் என பலஸ்ருதி காணப்படுகிறது. இவ்வாறாக 17வது படல கருத்து தொகுப்பாகும். 1. ஆஷாடம் என்கிற ஆடிமாதத்தில் பூர நட்சத்திரத்திலோ, ஐப்பசி மாத பூர நட்சத்திரத்திலோ இந்த பூரநட்சத்திர பூஜையை செய்யவும். 2. தேவிக்கு முன்பு கூறிய முறைப்படி இரவில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தேவனுக்கும் தேவிக்குமாவது ரக்ஷõபந்தனம் செய்து கன்னிகைகளுக்கு தங்கம் முதலியவைகளையும் 3. வஸ்திரம், உணவு முதலியவைகளை கொடுத்து தேவிக்கு பாலை நிவேதனம் செய்ய வேண்டும். எல்லா அலங்காரத்துடன் கூடியதாக தேவியை கிராம வீதி வலம் செய்ய வேண்டும். 4. அந்த ஸமயத்தில் முளையிட்ட பாசிபயிரை உரிய இலக்கணமுடையதாக அர்ப்பணிக்க வேண்டும். கிராம பிரதட்சிணத்திற்கு முன்பு நைவேத்யம் கொடுத்தோ கொடுக்காமலோ பூஜிக்க வேண்டும். 5. ஆஸ்தான மண்டபத்தையடைந்து தட்டி சுற்றுதலை செய்க. சூர்ணோத்ஸவ முறைப்படி மஞ்சட் பொடியையும், நல்லெண்ணையையும் 6. தேவனுக்கும், தேவிக்கும் கொடுத்து பிறகு ஜனங்களுக்கும் கொடுக்க வேண்டும். தாம்பூலம், பலவித காய்கறிகள் அரிசி முதலியவைகளுடன் மஞ்சட் பொடியையும் கொடுக்க வேண்டும். 7. சூர்ணோத்ஸவமின்றியும் அரிசி முதலியவைகளை அளிப்பதுமின்றியுமாக சக்த்யஸ்திரத்துடன் தேவியை நதி முதலான தீர்த்தங் களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். 8. நெல் முதலானவைகளால் இரண்டு ஸ்தண்டிலம் அமைத்து அதில் முன்னதாக சூலாஸ்திரத்தையும் தேவியையும் ஸ்தாபித்து அதற்கு முன்பாகத்தில் 9. ஸ்நபன முறைப்படி அந்த குடங்களை முறைப்படி ஸ்தாபித்து ஹ்ருதய மந்திரத்தினால் ஸத்துமாவு, பழங்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும். 10. பிறகு அந்த கும்ப தீர்த்தங்களால் அந்த சக்தியஸ்திரத்தை அபிஷேகம் செய்வித்து தீர்த்த மத்தியில் ஜனங்களுடன் கூடி சூலத்துடன் ஸ்நானம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும். 11. தீர்த்தவாரி கார்யமின்றி, கிராமவீதி வலம் வரையில் அந்த தினத்தில் அணையா விளக்கு, வாடாதமலை இவைகளுடன் கூடியதாகவும் செய்யலாம். 12. பலியை கொடுப்பதுடன் கூடியதாக ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். அல்லது இரவிலோ பகலிலோ பலி ஹோமமிவைகளுடன் சேர்ந்ததாகவும் 13. எல்லா அலங்காரத்துடன் பிம்பத்தை வீதிவலம் வரச் செய்து எல்லா ஜனங்களுடன் கூடியதாக செய்ய வேண்டும். பலவகையான இனிமையான பழங்களையும் 14. வெல்லக்கட்டியுடன் கூடிய ஸத்துமாவையும் கொடுக்க வேண்டும். பலவித அப்பங்களுடனும் பலவகையான பழங்களையும், 15. வெல்லம், பழம் ஸத்து மாவையும் தீர்த்தக் கரையில் ஈசனுக்கு நிவேதித்து, தேவதேவிக்கு முன்பாக புதியதீர்த்தத்தில் தீர்த்தவாரி செய்து 16. அல்லது திரிசூலத்துடன் கூடியாவது தீர்த்தவாரி செய்து பின் ஆலயத்தையடைந்து, பூஜையுடன் கூடியதாக ஸ்நபனம் செய்ய வேண்டும். 17. பிரபூதஹவிஸ் என்ற பாவாடை நிவேதனம் செய்து, முக வாசனையோடு தாம்பூலத்தையும் நிவேதித்து ஆசார்யனை பூஜிக்க வேண்டும் 18. வஸ்திரம், ஸ்வர்ணம், மோதிரமிவைகளோடு தட்சிணையையும் குருவிற்கு கொடுக்க வேண்டும். எல்லா பாபங்களின் அழிவிற்கும், எல்லா கெட்ட கிரியைகளின் நிவ்ருத்திக்கும் 19. எல்லா விருப்ப பயனை அடைவதற்கும் எல்லா செயலும் சித்திப்பதற்காகவும் தேவிக்கு மகிழ்ச்சியையளிக்கக்கூடிய இந்த ஆடிப்பூர பூஜையை செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆடிமாத பழ பூஜா முறையாகிற பதினேழாவது படலமாகும்.

Advertisement
 
Advertisement