Advertisement

வெள்ளத்தில் மூழ்கிய பசவேஸ்வரா கோவில்

பாகல்கோட்: பலத்த மழையால் பாகல்கோட் மாவட்டத்தின் கட்டப்பிரபா, கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் முதோள் அருகே உள்ள மாசகனுார் கிராமத்தில் உள்ள ஹொளே பசவேஸ்வரா கோவில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கோவில் படிக்கட்டுகள் வரை வெள்ளம் நிரம்பி உள்ளது. கோவிலில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம், பூஜைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மூன்று நாட்களில் கோவில் முழுமையாக மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
 
Advertisement