Advertisement

ஊதுபத்தி தயாரிக்கிறது திருப்பதி கோயில் நிர்வாகம்

திருப்பதி : திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்தால் தயாரிக்கப்படும் ஊதுபத்தி வருகின்ற சுதந்திர தினம் முதல் விற்பனைக்கு வருகிறது. நறுமண ஊதுபத்தி தயாரிப்பதற்கு தேவையான மலர்கள் மலை மலையாக திருமலைக்கு வருகிறது, இதனை அதன் பயன்பாட்டுக்கு பிறகு :ஊதுபத்தி தயாரிக்க பயன்படுத்தலாம் என்ற கருத்தின் அடிப்படையில் தற்போது கோவில் நிர்வாகம் ஊதுபத்தி தயாரிக்க முடிவு செய்துள்ளது.பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரபல ஊதுபத்தி நிறுவனம் கோவிலின் இந்த முயற்சிக்கு லாப நோக்கமில்லாமல் உதவ முன்வந்துள்ளது.முதல் கட்டமாக ஊதுபத்தி லாடு கவுண்டர்களில் விற்பனை செய்யப்படும் பின்னர் மற்ற இடங்களுக்கு விற்பனை விரிவு செய்யப்படும்.

Advertisement
 
Advertisement