Advertisement

சித்தானந்தா சுவாமி கோவிலில் ஆடி பிரதோஷ வழிபாடு

புதுச்சேரி-கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், ஆடி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.புதுச்சேரி இ.சி.ஆர். கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்தா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில், பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, சாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி, தேவ சேனாதிபதி குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement