Advertisement

புதையல் ஆசையில் சிவன் சிலை உடைப்பு

உத்தர கன்னடா: உத்தர கன்னடா ஹளியாளா அருகே உள்ள ஹார்னோடா கிராமத்தில் பழங்கால சிவன் கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் இருக்காது. இதை பயன்படுத்தி கொண்ட சிலர், புதையல் ஆசையில் கோவிலின் உள்ளே தோண்டி சேதப்படுத்தி உள்ளனர். மர்ம நபர்கள் தோண்டியதில் சிவன் சிலை இரண்டாக பிளந்துள்ளது. பீடம் உடைந்துள்ளது. கல்லினால் செதுக்கப்பட்ட அழகிய சிலைகள் சேதம் அடைந்துள்ளது. மக்கள் நட மாட்டம் இல்லாததால் இந்த அடாவடி செயல் தாமதமாக தெரிய வந்துள்ளது. பா.ஜ., பிரமுகர் சுதாகர் ரெட்டி வந்து கோவிலை பார்வையிட்டார். இது போல இருக்கும் பழங்கால கோவில்கைள கண்டுபிடித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரியுள்ளார். ஹளியாளா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Advertisement