Advertisement

வெங்கடேச பெருமாள் கருட வாகனத்தில் உலா

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே அப்புலுபாளையத்தில் உள்ள திருக்கோயிலில், பவுர்ணமி சிறப்பு பூஜையையொட்டி, அருள்மிகு வெங்கடேச பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே அப்புலுபாளையத்தில் அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதம், ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்த, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். புரட்டாசி சனிக்கிழமை தோறும் காலை விஸ்வரூபம், தொடர்ந்து சாற்றுமுறை, நடைதிறப்பு, மங்கள ஆரத்தி, உற்சவர் வழிபாடு இரவு சயன பூஜையுடன் விழா நிறைவடைகிறது. நேற்று முன்தினம், பவுர்ணமி தினத்தையொட்டி, அருள்மிகு வெங்கடேச பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, பெருமாள் கருடவாகனத்தில் கோவிலைச் சுற்றி வலம் வந்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement