Advertisement

ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவம்: சிறப்பு அலங்காரத்தில் தாயார்

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் கடந்த 6-ம் தேதி தொடங்கி வருகிற 14-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். உற்சவத்தின் 8-ம் நாள் உற்சவர் ரெங்கநாயகி தாயார் சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement