Advertisement

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.41.73 லட்சம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில், 41.73 லட்சம் ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் மொத்தம் 12 உண்டியல்கள் உள்ளன.செங்கல்பட்டு உதவி ஆணையர் பாலசுப்ரமணியன், கோவில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் மேலாளர் வெற்றிவேல் முன்னிலையில், நான்கு உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 41.73 லட்சம் ரூபாய் பணம்; 430 கிராம் தங்கம், 3,860 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.

Advertisement
 
Advertisement