கடலூர்: கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் அருள் பாலிக்கும் ராஜகோபாலசுவாமி திருத்தலத்தைத்தான் தமிழக திருப்பதி என்கிறார்கள். இங்கு புரட்டாசி மாதத்தில் ஒரு நாள் இந்த பெருமாள் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மூலவர் ராஜகோபாலசுவாமி. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் செங்கமலவல்லி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் உள்பிரகாரங்களில் ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், ஆண்டாள், ராமர் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் வரும் 07ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி 9ம் தேதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.