திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ ஷீரடி சாய்பீடத்தில், ஒன்பதாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, 108 சங்கு பூஜை நடந்தது. திருப்பூர், வாலிபாளையத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பீடத்தின், ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. நேற்று முன்தினம், ஸ்ரீ சாய் மஹானின் பல்லக்கு திருவீதி ஊர்வலம் மற்றும் சிறப்பு ஆரத்தியுடன், எட்டாம் ஆண்டு நிறைவு பெற்றது. நேற்று காலை, சிறப்பு ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, அவிநாசி, திருப்புக்கொளியூர் ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் தலைமையில், 108 சங்காபிஷே வழிபாடு, கலச பூஜை, சிறப்பு அலங்காரம், ஆரத்தி நடந்தது. ஸ்ரீ ஷீரடி சாய்பீடம் அறக்கட்டளை நிர்வாகிகள் ரவி, ஆனந்தன், சக்திவேல், செந்தில்நாராயணன் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.