Advertisement

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

தஞ்சாவூர், கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர், திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் ஆகிய தேர்களுக்கு அடுத்து மிகப்பெரிய தேர் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒரு கோவிலான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அதிகாலை 5:30 மணிக்கு பெருமாள் சீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் தேரில் எழுந்தருளிய பெருமாளை வணங்கினர். தேர் நிலைக்கு வந்ததை தொடர்ந்து இரவு பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

Advertisement
 
Advertisement