காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீநித்திஸ்வரர் கோவிலில் ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நித்திஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீநித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீநித்திஸ்வரர் சுவாமி ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று ஸ்ரீ பைரவி உடனுறை காலபைரவருக்கு மஞ்சள், பால்,தயிர்,பஞ்சாமிர்தம்,சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பின்னர் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து பைரவர் மூர்த்திகளுக்கு முத்தங்கி அணிவித்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.