Advertisement

ஸ்ரீவி. ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவம்; ஜூன்.29 ல் கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி ஸ்வாதி உற்சவம் ஜூன் 29ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜூலை 9 வரை 11 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு ஜூன்.29 அன்று காலை 9:30 மணிக்கு வடபத்ரசயனர் சன்னதியில் கொடியேற்றமும், அதனை தொடர்ந்து தினமும் காலையில் சுவாமி மண்டபம் எழுந்தருளலும், இரவில் வீதி புறப்பாடும் நடக்கிறது.‌ ஜூலை 7 அன்று காலை 7:30 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பட்டர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement