Advertisement

திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மங்கலம்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் (1ம் தேதி) தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணிக்கு அரவாண் களபலி நடந்தது.முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா மாலை 5:30 மணிக்கு நடந்தது. ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், மாலை 5:00 மணியளவில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

Advertisement
 
Advertisement