Advertisement

மதுராந்தகம் ராமர் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

மதுராந்தகம் : மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்குகியது.மதுராந்தகத்தில், ஏரிகாத்த ராமர் எனும் கோதண்டராமர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில், வேறெங்கும் காண முடியாத மூலவர் சன்னிதியில் ராமர், சீதையை கைபிடித்தவாறு திருமணக்கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு.இக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்குகியது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் காலை, மாலை என, இரு வேளைகளிலும், பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி வீதியுலா வருவார். ஜூலை 19ல் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

Advertisement
 
Advertisement