மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6ம் நாளான நேற்று வெள்ளி கிளி வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாகனத்தில் அம்மன் எழுந்தருள்வார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.