Advertisement

சீரடி குபேர சாய்பாபா கோவில் மங்கலம் பூஜை பூர்த்தி விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தியாகிவடிவேல் நகரில் புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேக மங்கள பூஜை பூர்த்தி விழா நடந்தது.

திருக்கோவிலூர் தியாகி வடிவேல் நகரில் புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 48 நாள் மங்கள பூஜை நடந்தது. இதன் பூர்த்தி விழா நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது. கலச ஸ்தாபனம், ஹோமங்கள், 11:00 மணிக்கு அபிஷேகம், 12:30 மணிக்கு மகாபூர்ணகுதி, மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா ஆரத்தி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் விநியோகிக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பஜன், 7:30 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. கோவில் நிர்வாகி சுப்பு உள்ளிட்ட விழா குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement