Advertisement

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா

காக்கிநாடா: காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழாவை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாதபூஜை நடத்தினார். காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் முகாமிட்டு சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார். அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு பாதபூஜை செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிறப்பு குறித்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேத விற்பன்னர்கள் பலர் பேசினர். அயர்ன் பாக்ஸ், சமையல் பாத்திரங்கள், காதொலி கருவிகள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன. சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது. காஞ்சிபுரத்தில் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வியாச பூஜை, வேத பாராயணங்கள் நடந்தன. மாலை ஜெயந்திரர் படத்துடன் ராஜ வீதிகளில் ரத ஊர்வலம் வலம் வந்தது.

Advertisement
 
Advertisement