Advertisement

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீவில்லிபுத்துார் : திருப்பதி - திருமலை பிரமோற்சவத்தின்ஐந்தாம் நாளில், ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து நேற்று திருப்பதிக்கு எடுத்துசெல்லப்பட்டன.

இதை முன்னிட்டு நேற்று காலை, 11:30 மணிக்கு கோவில் வெள்ளிக்குறடு மண்டபத்தில் ஆண்டாளுக்கு மாலை, கிளி, பட்டு சாற்றி, மங்களப் பொருட்கள் சமர்பித்து, சிறப்பு பூஜைகளை பாலாஜி பட்டர் செய்தார். திரளான பக்தர்கள்தரிசனம் செய்தனர்.பின், ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்களப்பொருட்களை ஒரு கூடையில் வைத்து, ஸ்தானிகம் கிருஷ்ணன், பிரசன்னா தலைமையில் மாடவீதி சுற்றி வந்து, திருப்பதி எடுத்து செல்லப்பட்டது. விழாவில், தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் முத்துராஜா, கோவில் பட்டர்கள் பங்கேற்றனர். இன்று திருமலை ஜீயர் மடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு, சேவா காலம், திருவீதி சுற்றி வந்து கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. நாளை காலை ஏழுமலையானுக்கும், மாலையில் மலையப்ப சுவாமிக்கும் ஆண்டாள் மாலை சாற்றி கருடசேவை நடக்கிறது.

Advertisement
 
Advertisement