Advertisement

பட்டத்தரசி அம்மன் மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா

அவிநாசி: அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. முன்னதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர் . அதனைத்தொடர்ந்து முதல் கால யாக பூஜையில் கணபதி ஹோமத்துடன் வாஸ்து சாந்தி காப்பு கட்டுதல் பூர்ணாகுதி, திரவியாகுதி மற்றும் மூலாலய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன சாந்து சாத்துதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. மேலும், இரண்டாம் கால யாக பூஜையில்,வேதிகார்ச்சனை, நாடி சந்தனம், மகாதீபாரதனை நடைபெற்று மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மஹா கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement