Advertisement

திருவண்ணாமலை கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த அப்பு, 22, என்பவர் கஞ்சா போதையில் பைக்கில் வந்து, திருமஞ்சன கோபுர வாசலில் மோதி கீழே விழுந்தார். பின்னர், அரிவாளுடன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்குள் புகுந்து, அவரது நாற்காலியில் அமர்ந்து, கோவில் ஊழியர்களை மிரட்டினார். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதன் எதிரொலியாக நேற்று, கோவில் பிரதான கோபுரங்களான ராஜகோபுரம், திருமஞ்சனம் கோபுரம், பே.கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட நான்கு கோபுர வாசல்களிலும் ஏ.கே.,47 ரக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடமைகளையும் சோதனை செய்த பிறகே, கோவிலுக்குள் போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement