Advertisement

கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நத்தம், நத்தம் - கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற ஜூன் 1-ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. மறுநாள் காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 3-ம் தேதி சனிக்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.முன்னதாக கொடியேற்ற விழாவில் திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமி, நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, முன்னாள் தலைவர் சிவலிங்கம், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக் குமார், நகர செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement