Advertisement

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கோலாகலம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவம், கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமிக்கு விசேஷ மகா அபிஷேகம் நடைபெற்றது. 10:00 மணிக்கு சிற்சபையில் ரகசிய பூஜை நடத்தப்பட்டு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, தீர்த்தவாரி நடைபெற்றது. மதியம், 3:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் நடனம் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement