Advertisement

தென்திருப்பேரை சுடலைமாடசுவாமி கோயில் கொடைவிழா

திருச்செந்தூர்: தென்திருப்பேரை நீர்க்கரை போத்தி மற்றும் சுடலைமாடசுவாமி கோவிலில் கொடைவிழா நடந்தது.திருச்செந்தூர் அருகே தென்திருப்பேரை நீர்க்கரை மற்றும் சுடலைமாடசுவாமி கோவிலில் கொடைவிழா நடந்தது. கொடைவிழா அன்று காலை தென்திருப்பேரை அதிமுக ஒன்றிய பொருளாளர் ராஜாராம் மகன் ராம்குமாரின் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில மீனவரணி இணைச்செயலாளர் ஜெனிபர் சந்திரன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் மனோகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் தாமோதரன், மாவட்ட பஞ்., சேர்மன் சின்னத்துரை, மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் விஜயகுமார், துணைச் செயலாளர் ஏரல் ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தலிபா, திருச்செந்தூர் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், தாமிரபரணி திட்டக்குழு தலைவர் உதயசூரியன், தூத்துக்குடி நகர செயலாளர் ஏசாதுரை, தென்திருப்பேரை நகர செயலாளர் சிவலிங்கம் உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். பால்குட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement