Advertisement

விநாயகருக்கு சந்தனகாப்பு விழா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 29ம் ஆண்டு சந்தனகாப்பு விழா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில், சுவாமிக்கு சோடசோபவுபச்சாரா தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நாதஸ்வர, தவித் வித்வான்கள் கலந்து கொண்ட சிறப்பு இசை கச்சேரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரடி விநாயகர் இளைஞர் குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement