Advertisement

வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா!

திட்டக்குடி: திட்டக்குடி வதிட்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவிலில் உறியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திட்டக்குடி வதிட்டபுரத்தில் உள்ள திருமகிழ்ந்த வல்லி சமேத ஸ்ரீஅரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ணன் பிறப்பையொட்டி சிறப்பு அ பிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணிக்கு உறியடி உற்சவமும், வழுக்குமரம் ஏறுதலும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு ராஜஅலங்காரத்தில் சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைணவ செம்மல் வரத சிங்காச்சாரியார் சுவாமிகள் பூஜைகளை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement