Advertisement

சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை!

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, கால பைரவருக்கு நேற்றுமுன்தினம் மாலை 5.00 மணிக்கு, பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிசேக பூஜை நடந்தது.பின், ரோஜா, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டது. பின், சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை போன்றவைகளில் விளக்கு வைத்து கால பைரவரை வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement