Advertisement

மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

காரிமங்கலம்: காரிமங்கலம் மலை மீதுள்ள ஸ்ரீஅபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை இன்று (ஜூன் 15) நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பக்தர்கள் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், குருக்கள் பிரகாஷ் உட்பட பக்தர்கள் செய்து வருகின்றனர். * தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பவுர்ணமியையொட்டி, காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வர மடம் ஸ்ரீவேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பக்தர்கள் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். இரவு 11 மணிக்கு சந்திரகிரஹணம் நடப்பதால், நாளை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

Advertisement
 
Advertisement