Advertisement

பாலமுருகனுக்கு ராஜ அலங்காரம்!

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் தை மாத கிருத்திகை பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. 7:00 மணிக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8:00 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement