Advertisement

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா!

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் சித்திரை கிருத்திகை விழா நடந்தது. மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நேற்று சித்திரை மாத கிரு த்திகை விழாவை முன்னிட்டு காலை 6 :00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தி லுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர், பாலசித்தர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பி ன்னர் மூலவர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத் தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8: 00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு நடந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்ட சுவாமி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement