Advertisement

பஞ்ச கவ்யத்தில் ஜொலிக்கிறது லட்சுமி நாராயணன் கோவில்!

ஆர்.கே.பேட்டை: அஷ்டலட்சுமி நாராயணன் கோவில், புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், விமான கோபுரம், ராஜ கோபுரம் மற்றும் அஷ்ட லட்சுமி சன்னிதிகள், பஞ்ச கவ்யம் பூசப்பட்டு ஜொலிக்கின்றன. திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான, வங்கனுார் அஷ்ட லட்சுமி நாரா யணன் கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான பாலாலயம் அமைக்கும் பணி, கடந்த மாதம் நடந்தது. அதை தொடர்ந்து, ராஜ ÷ காபுரம், விமான கோபுரம், அஷ்டலட்சுமி கோவில் உள்ளிட்டவற்றுக்கு, பஞ்ச கவ்யம் (பஞ்ச வர்ணம்) பூசும் பணி நடந்து வருகிறது. ஆகம விதிகளின் படி, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள், இரண்டு வாரங்களில் நிறைவடையும். பாலாலயம் மூலவர் சன்னிதியிலேயே அமைக்கப் பட்டுள்ளதால், தினசரி பூஜைகள் வழக்கம் போல் நடந்து வருகின்றன. கோவில் வெளி பிரகாரத்தின் தெற்கு பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
 
Advertisement