Advertisement

பட்டத்தரசி அம்மன் கோவில் பூச்சாட்டு விழா!

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில், பட்டத்தரசி அம்மன் கோவில்பூச்சாட்டு விழா துவங்கியது.

விழாவின், முக்கிய நிகழ்வான பால்கம்பம் மற்றும் பூக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்களுடன் பூக்கம்ப ஊர்வலம் பட்டத்தரசியம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. வரும், 31வரை, கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, அம்மன் அழைப்பு, மதுரை வீரன், பொம்மியம்மா, வெள்ளையம்மா, பட்டத்தரசி அம்மன் உருவாரங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 3ல் சக்தி அழைத்தல், பொங்கல் வழிபாடு நடக்கிறது. மாலையில் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா, வெள்ளைக்குதிரையில் பட்டத்தரசியம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தல் நடக்கிறது.

Advertisement
 
Advertisement