Advertisement

நிவேதன முறை!

சுருதிசொல் நிவேதனம் ஈசான வதனத்திற்
சுத்தானம் இனிய தாமால்
தூயதத் புருடவ தனத்திற்கு ளோதனம்
சொலும கோரத் தில்திலம்
தரைபுகழும் வாமதே வானனமதிற் சுவைகொள்
தயிரன நிவேத னமதாம்
சத்தியோ சாதத்தின் முற்கான முறைசெயின்
தருபயன் இராச்சி யந்தான்
உரைசெய்பா கிலையுதவின் மிக்கசுக மேநல்கும்
ஓங்கும்வெண் சங்க பூசைக்கு
ஓங்குபுண் ணியமுறும் குச்சிப்பு லன்பொடெம்
உறுப்பிடப் பயம றுமெனத்
திரிபுரை மனோன்மணி யெம்மனைக் குநீமுனம்
செப்புமறை நீதி யன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

Advertisement
 
Advertisement