Advertisement

வாத்தியங்களால் உபசாரம் செய்தல்!

அனகநின் திருமுன்மத் தளமுழங் கச்செயின்
அவர்க்கதிக சுகம ளிக்கும்
அயனுடைய தாளமது சோகமாற் றும்படகம்
அளவில்பா வம்த விர்க்கும்
வினவுபே ரிகைடக்கை காந்தரம் சர்ச்சரிகள்
வேவுகுட முழவும் அடைவே
மெய்த்திடம் பிரீதியொடு சுகம்இட்ட காமியம்
விளங்கு முத்தியு நல்குமால்
அனுதினம் நரம்புதுளை தோற்கருவி கோடிகம்
மணிக்குலமி குத்தல் விசயம்
ஆகும்வளை பகையறும்நி ருத்தவாத்திய நடமும்
ஆயுளவை யோங்கும் என்றாய்
தினமும்அதி ரியவொலிகள் எழுகடல் அடங்கஎழு
தேவதுந் துபியி னோங்கும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

Advertisement
 
Advertisement