ஈனமுறு கன்னியாக் கொடுவைசெவி கொம்புவால்
இவையறுதல் முதுமை சூலான்
இழிதரு மலம்புசித் திடும்ஆன் மலட்டுஆன்
இலக்கணம் இலாத ஆன்நோய்
தானுடைய தேனுவுடன் ஈன்றுபதி னைந்துநாள்
தன்னிலுட் படுப சுக்கள்
தழைசெவிடு குருடுமுடம் மாய்ந்தகன் றுடையகோச்
சாற்றுமிகக் குற்ற மதெலாம்
ஊனமுள(து) இவையலது நற்றேனு பூசனைசெயது
உறைகொள்ஐம் பிரம மனுவால்
உயர்கற்பம் அனுகற்பம் உபகற்ப மறைநூல்
உரைத்திடும் கற்ப முறையால்
தேனுமனு வோதிநல் விபூதிதனை விளைவிக்கச்
சிவாகமம் தனிலு ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.