அதிகதரு மம்புரிந் தாலும்வர நதியமுனை
யாதிநதி மூழ்கி னாலும்
ஆயிரம் சுருதிதினம் ஓதினும் பலதானம்
அந்தணர்க்கு உதவினாலும்
விதிமுறையின் நூறுபரி மேதமுதல் எழுமூன்று
வேள்வியும் இயற்றினாலும்
மெய்க்கருக வுண்ணாது சாந்திரா யணமாதி
விரதங்கள் ஆற்றி னாலும்
மதியிலகு சடிலநின் அபராதம் உறுதோட
மட்டுநின் னுபய கமல
மலரடித் தொண்டன்றி நீங்காது கருதிடினும்
மாலயனும் அஞ்சு வார்கள்
சிதவிடையின் உலவிவரம் அருள்மகா தேவஅத்
தீங்கொழிய எற்கருள் செய்வாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.