Advertisement

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காலை 7:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கும், மூலவருக்கும் ஒருசேர மகா தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, சோடசோபவுபச்சார தீபாராதனையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement