Advertisement

ஆடிப்பெருக்கு விழா: வால்பாறை கோவில்களில் சிறப்பு பூஜை!

வால்பாறை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடிப்பெருக்கு தினமான நேற்றுமுன்தினம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. வால்பாறை அண்ணாநகர் முத்து மாரியம்மன் கோவில், சிறுவர்பூங்கா சக்திமாரியம்மன்கோவில், வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், கவர்க்கல் காமாட்சி அம்மன் கோவில், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில், முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஈட்டியார் கருமாரியம்மன் கோவில், சின்கோனா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement