Advertisement

ராகவேந்திர ஸ்வாமிகள் 344வது ஆராதனை விழா

நாமக்கல்: நாமக்கல், கோட்டை கார்நேசன் சத்திரத்தில், ராகவேந்திர ஸ்வாமிகளின், 344வது ஆராதனை மஹோத்ஸவ விழா சிறப்பாக நடந்தது. ராகவேந்திர ஸ்வாமிகள் மந்திராலயம் செல்லும் வழியில், நாமகிரி லட்சுமி ஸமேத நரசிம்ம ஸ்வாமி வாயுபகவான் ஆகியோரை தரிசனம் செய்து புறப்பட்டார். அவரது, 344வது ஆராதனை மஹோத்ஸவ விழா, நாமக்கல் கோட்டை, கார்நேசன் சத்திரத்தில், ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனையும், அபிஷேகமும், அர்ச்சனை, தீபாராதனை நேற்று கோலாகலமாக நடந்தது. காலை, 9 மணிக்கு, மகா பூஜை, 11.30 மணிக்கு, மகா மங்களாரத்தி, மதியம், 12 மணிக்கு அலங்கார பந்தி, 12.30 மணிக்கு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை மாத்வசபா நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement