Advertisement

திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருவெண்ணெய்நல்லூர்: ஆமூர் சிவன் கோவிலில் திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆமூர் மரகதாம்பிகை சமேத மார்க்கசகாய ஈஸ்வரர் கோவிலில் கடந்த 29ம்தேதி இரவு 7:30 மணிக்கு, பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜைகள் நடந்தன. திருவண்ணாமலை ஓம் ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளை நிறுவனர் மோகன்சாது பூஜையை துவக்கி வைத்தார். முன்னதாக மாலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர் பூஜை செய்யப்பட்டு, பெண்கள் குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் சந்திராபாலு, கவுன்சிலர் கோவிந்தம்மாள் சக்ரவர்த்தி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement