Advertisement

திருவள்ளூர் தட்சிணாமூர்த்திக்கு பாலபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள குரு பகவான் கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று, காலை 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதேபோல், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ-விஷ்ணு கோவில், மணவாள நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவில்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரங்கள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபட்டனர்

Advertisement
 
Advertisement