திருவாடானை: திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஒட்டுடையார் காளியம்மன் கோயில் திருவிழா மே 24 ந் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 1008 திருவிளக்கு பூஜை நேற்று இரவு நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி காளியம்மனை வழிபட்டனர். மே 31ந் தேதி பூக்குழி விழா, அண்ணதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.