Advertisement

300 ஆண்டு பழமையான கோவில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்

அன்னுார்: பசூரில், 300 ஆண்டுகள் பழமையான அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 10ம் தேதி நடக்கிறது. பசூரில், 18 கோவில்கள் உள்ளதால் கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இதில், 300 ஆண்டுகள் பழமையான குப்பாயம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன் சுயம்பாக தோன்றி அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் பழமை மாறாமல், 36க்கு, 56 அடி அளவு மகா மண்டபம், ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ளது. மேல்சாளகாரத்தில், 108 செம்பு கலசங்கள் பொருத்தப்படுகின்றன. கோவில் வளாகத்தில், புதிதாக சக்தி விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முன்புறம், 250 ஆண்டுகளான அரச மரமும், ஆலமரமும் உள்ளன. ஆகம விதிப்படி திருப்பணிகள், பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளன. வரும், 7ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. பின்னர் புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தம் எடுத்து வர பக்தர்கள் புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. 8ம் தேதி மகாலட்சுமி ஹோமம், கோமாதா பூஜை நடக்கிறது. 9ம் தேதி காலையில் விமான கோபுர கலசம் வைத்தல் நடக்கிறது. 10ம் தேதி காலை 7:35 மணிக்கு சக்தி விநாயகர், குப்பாயம்மன் மற்றும் 108 பரிவார கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

Advertisement
 
Advertisement