Advertisement

சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் துவக்கம்!

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் நேற்று துவ ங்கியது. விழாவையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, புண்யாவாசனம், மிருத்ஸங்கிரணம், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி, ஆராதனம், பஞ்சகவ்ய பிரதிஷ்டை, பவித்ர சயனாதிவாசம், பிரதான ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு, பூர்ணாஹூதி, வேதபிரபந்த சாற்றுமுறை நடந்தது. இன்று (30ம் தேதி) காலை 7:00 மணிக்கு புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், 9:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், பவித்ரம் ஐப்யம், 10:30 மணிக்கு மேல், பெருமாள், தாயார், சயனநரசிம்மர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றுதல் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, பூர்ணாஹூதி, வேதபிரபந்த சாற்றுமுறை, மாலை 5:30 மணிக்கு, உற்சவர் உபயநாச்சியாருடன் உள்புறப்பாடும், மாலை 6:30 மணிக்கு, புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், இரவு 8:30 மணிக்கு, பூர்ணாஹூதி, வேதபிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. மூ ன்றாம் நாளான, நாளை (31ம் தேதி) காலை 7:00 மணிக்கு, புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், 9:00 மணிக்கு, அஷ்டோத்தர சத 108 கலச திருமஞ்சனம், 11:30 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, வேதபிரபந்த சாற்றுமுறை, மாலை 6:30 மணிக்கு, உற்சவர் உபய நாச்சியாருடன் உள் புறப்பாடு நடக்கிறது.

Advertisement
 
Advertisement