Advertisement

புதிய வடிவமைப்பில் விநாயகர் சிலை தயாரிப்பில் போட்டி

அய்யன்பேட்டை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புதிய வடிவமைப்பில் சிலை களை உருவாக்குவதில் பொம்மைத யாரிக்கும் தொழிலாளர்களிடையே பெரிய போட்டியே ஏற்பட்டுள்ளது’ என, தொழிலாளர்கள் தெரிவித்தனர். செப்டம்பர் 5ல், விநாயகர் சதுர்த்தி விழா நடை பெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, கிராமம் மற்றும் நகர பகுதிகளில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவோர் எண்ணிக்கை அதிகம். இதற்காக, 5,000 ரூபாய் முதல், 14 ஆயிரம் ரூபாய் வரை , அவரவர் தகுதிக்கு ஏற்ற விலையில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. ஒரே மாதிரியாக இல்லாமல், வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்க, சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் இடையே போட்டி நிலவுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சிந்திப்பதால், வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் உருவாகின்றன.

Advertisement
 
Advertisement